முகப்பு
தமிழ்நாடு

விழுப்புரத்தில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்ட நகராட்சி அலுவலகங்கள் முன்பு, பாமக சார்பில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மக்கள் திரள் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஜனவரி 2021, 5:39 pm IST
விழுப்புரம் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற பாமக மக்கள் திரள் போராட்டம்.
பகிர்:

விழுப்புரம் மாவட்ட நகராட்சி அலுவலகங்கள் முன்பு, பாமக சார்பில் வன்னியர் சமூகத்தினருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மக்கள் திரள் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சி அலுவலகம் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ஆர். புகழேந்தி தலைமை வகித்தார். புதுச்சேரி மாநில அமைப்பாளர் முன்னாள் எம்பி தன்ராஜ் சிறப்புரையாற்றினார். மாநில துணைப் பொதுச்செயலாளர் தங்கஜோதி, மாநிலத் துணைத் தலைவர்கள் அன்புமணி, ஹரிகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள வன்னியர் சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 20% தனி இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வலியுறுத்திக் கோஷமிட்டனர். இதனையடுத்து காந்தி சிலையிலிருந்து ஊர்வலமாகச் சென்ற அவர்கள், நகராட்சி ஆணையர் தக்ஷிணாமூர்த்தியிடம் மனு அளித்தனர். இதேபோல் திண்டிவனம் நகராட்சி அலுவலகம் முன்பும், கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகம் முன்பும் மக்கள் திரல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் நகராட்சி அலுவலகங்களில் மனு அளித்தனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments