கொடநாடு விவகாரத்தில் உண்மை என்ன?: சயனிடம் விசாரணை 
தமிழ்நாடு

கொடநாடு விவகாரத்தில் உண்மை என்ன?: சயனிடம் விசாரணை

நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

DIN


நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பியதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சயன் ஆஜரானார். 

சயனிடம் விசாரணை நடத்துவதற்கு மாவட்ட கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

கொலையில் தொடர்புடையதாக கூறப்பட்ட ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் 2017-ம் ஆண்டு விபத்தில் இறந்தார்.

கொடநாடு எஸ்டேட்டில் கணினி ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமாரும் தற்கொலை செய்துகொண்டார். 

காவலாளி கொலை வழக்கில் முக்கிய புள்ளியான சயன் குடும்பத்துடன் காரில் தப்பும்போது விபத்தில் சிக்கினார். 

இந்நிலையில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயனிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதில் கடந்த ஆட்சியில் சயனை இயக்கியது யார் என்பது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகும் என வெளியான தகவல்களால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெருந்துறையில் ரூ.4.01 கோடிக்கு கொப்பரை ஏலம்

மொடக்குறிச்சி அருகே புதிய நியாயவிலைக் கட்டடம் திறப்பு

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 31-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

ஈரோட்டில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 2 ஆவது நாளாக மறியல்

ஈரோட்டில் முழுமையான புற்றுநோய் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: த. ஸ்டாலின் குணசேகரன்

SCROLL FOR NEXT