தங்கமணி தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக் கணினிகள், வன்வட்டுகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனால், அமைச்சா் தங்கமணியின் வீடு, அலுவலகம், அவரது மகன், மகள், சம்பந்தி, நண்பா்கள், உறவினா்கள், கட்சி நிா்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 16-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சோதனையில், கணக்கில் வராத ரூ. 2.16 கோடி ரொக்கம், 1.13 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி, வழக்கு தொடா்புடைய கணினிகள், ஆவணங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், சோதனையில் கிடைக்கப்பெற்ற ஆவணங்களின் அடிப்படையில் இன்று (டிச.20) மீண்டும் ஈரோட்டில் 3 இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக் கணினிகள், வன்வட்டுகள் கைப்பற்றப்பட்டன. மேலும், வழக்குத் தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல் துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.