கம்பம்: யோகா ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள யோகா ஆசிரியர்களுக்கு சுவாமி தயானந்த குருகுலம், ஸ்ரீ சாய் சேவா அறக்கட்டளை இணைந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினர்.
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள யோகா ஆசிரியர்களுக்கு சுவாமி தயானந்த குருகுலம், ஸ்ரீ சாய் சேவா அறக்கட்டளை இணைந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினர்.
தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர்கள் யோகா ஆசிரியர்கள் துரை. ராஜேந்திரன், யோகா ரவிராம். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக பள்ளி மாணவ மாணவியர், மூத்த குடி மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர்.
இவர்களைப் பாராட்டி பழனியைச் சேர்ந்த சுவாமி தயானந்த குருகுலம், ஓம் ஸ்ரீ சாய் சேவா அறக்கட்டளையும் இணைந்து வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கி பரிந்துரைத்தனர்.
ஸ்ரீ மத் போகர் பழனி ஆதினம் சித்தர் புலிப்பாணி சுவாமிகள், ஆனைமலை வித்யா பீடம் ஸ்ரீ ததேவானந்த் சரஸ்வதி சுவாமிகள், பழனி மெய்த்தவ பொற்சபையைச் சேர்ந்த மெய்த்தவ அடிகளும், வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும், சான்றிதழ்களையும் சனிக்கிழமை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.