தமிழ்நாடு

கூடலூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்: சீறிப்பாய்ந்த காளைகள்

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் மேற்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் திருவிழாவை முன்னிட்டு கூடலூர் குமுளி நெடுஞ்சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் பி.கே.ராம்பா தலைமை தாங்கினார், செயலாளர் ஆர்.அருண்குமார் முன்னிலை வகித்தார்.

பந்தயத்தில் பெரிய மாடு, நடுமாடு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு ,கரிச்சான் ஜோடி உள்ளிட்ட ஜோடி மாடுகள் பந்தயத்தில் கலந்துகொண்டன.

திண்டுக்கல், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான மடுகள் கலந்து கொண்டன.

வெற்றிபெற்ற பந்தய மாடுகளுக்கு விழா மேடையிலேயே பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க விவசாய அணியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT