முகப்பு
தமிழ்நாடு

கூடலூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்: சீறிப்பாய்ந்த காளைகள்

தேனி மாவட்டம், கூடலூரில் மேற்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 நவம்பர் 2021, 12:40 pm IST
இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் மேற்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் திருவிழாவை முன்னிட்டு கூடலூர் குமுளி நெடுஞ்சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் பி.கே.ராம்பா தலைமை தாங்கினார், செயலாளர் ஆர்.அருண்குமார் முன்னிலை வகித்தார்.

பந்தயத்தில் பெரிய மாடு, நடுமாடு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு ,கரிச்சான் ஜோடி உள்ளிட்ட ஜோடி மாடுகள் பந்தயத்தில் கலந்துகொண்டன.

திண்டுக்கல், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான மடுகள் கலந்து கொண்டன.

வெற்றிபெற்ற பந்தய மாடுகளுக்கு விழா மேடையிலேயே பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க விவசாய அணியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments