முகப்பு
தமிழ்நாடு

கூடலூரில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்: சீறிப்பாய்ந்த காளைகள்

தேனி மாவட்டம், கூடலூரில் மேற்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்.
பகிர்:

கம்பம்: தேனி மாவட்டம், கூடலூரில் மேற்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கூடலூரில் முத்தாலம்மன் திருவிழாவை முன்னிட்டு கூடலூர் குமுளி நெடுஞ்சாலையில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

ஒக்கலிகர் மகாஜன சங்க தலைவர் பி.கே.ராம்பா தலைமை தாங்கினார், செயலாளர் ஆர்.அருண்குமார் முன்னிலை வகித்தார்.

பந்தயத்தில் பெரிய மாடு, நடுமாடு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு ,கரிச்சான் ஜோடி உள்ளிட்ட ஜோடி மாடுகள் பந்தயத்தில் கலந்துகொண்டன.

திண்டுக்கல், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமான மடுகள் கலந்து கொண்டன.

வெற்றிபெற்ற பந்தய மாடுகளுக்கு விழா மேடையிலேயே பரிசுகள் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்க விவசாய அணியினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.