முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 17 நவம்பர், 2021 at 8:52 PM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:05 AM

கனமழை எச்சரிக்கை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு மற்றும்‌ தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு இசையில்‌ நகர்ந்து வரும்‌ 18-ஆம்‌ தேதி தெற்கு ஆந்‌திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரவாய்ப்புள்ளது.

இதனால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கெனவே நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இதேபோன்று தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.