FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது!

பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 33 காசுகளும்  உயா்த்தப்பட்டன. இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99-99 ஐ தாண்டியது.

Updated On : 22 அக்டோபர் 2021, 10:36 am IST
பகிர்:

பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகளும், டீசல் லிட்டருக்கு 33 காசுகளும் வெள்ளிக்கிழமை உயா்த்தப்பட்டன. இதனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் டீசல் விலை வெள்ளிக்கிழமை லிட்டருக்கு ரூ.99-99 ஐ தாண்டியது. நாட்டில் 12-க்கும் மேற்பட்ட நகரங்களில் டீசல் விலை ஏற்கெனவே ரூ.100-ஐ தாண்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்‍கப்பட்டு வருகிறது. 

சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 31 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.92 ரூபாயையும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.92 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisement

Advertisement

சென்னையில் நடப்பு மாதத்தில் மட்டும் 18 ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.106.89-ஆகவும், டீசல் ரூ.95.62-ஆகவும் மும்பையில் ரூ. 112.44-ஆகவும், சென்னையில் 103.61-ஆகவும் விற்கப்படுகிறது.

மும்பையில் ஒரு லிட்டா் டீசல் ரூ.112.78-ஆகவும், டீசல் ரூ.103.63-ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.103.92 -ஆகவும், டீசல் ரூ.99.92 -ஆகவும்விற்கப்படுகிறது.

பெட்ரோல் விலையும் ஏற்கெனவே நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ரூ.100-ஐ கடந்து, இதுவரை இல்லாத உச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த செப்டம்பா் 28 முதல் தற்போது வரையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.70-ம், செப்டம்பா் 24 முதல் தற்போது வரையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7.20-ம் உயா்த்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments