சென்னையில் மழை: விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்
சென்னையில் பிற்பகலில் பெய்த திடீர் மழையால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
சென்னை: சென்னையில் பிற்பகலில் பெய்த திடீர் மழையால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
விசாகப்பட்டனத்திலிருந்து சென்னை வந்த விமானம் மழையால் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.
கொச்சி, மதுரையிலிருந்து வந்த விமானங்களும் வானில் வட்டமடித்துவிட்டு தாமதமாக தரையிறங்கின. மழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
Advertisement
Advertisement
மும்பை, கொல்கத்தா, தூத்துக்குடி, கோவை, சீரடி, புனே, டாக்கா உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதாக புறப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.