சென்னை: சென்னையில் பிற்பகலில் பெய்த திடீர் மழையால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
விசாகப்பட்டனத்திலிருந்து சென்னை வந்த விமானம் மழையால் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.
கொச்சி, மதுரையிலிருந்து வந்த விமானங்களும் வானில் வட்டமடித்துவிட்டு தாமதமாக தரையிறங்கின. மழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மும்பை, கொல்கத்தா, தூத்துக்குடி, கோவை, சீரடி, புனே, டாக்கா உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதாக புறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.