முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: விசாரணை அறிக்கை தாக்கல்

கள்ளக்குறிச்சி கலவரம் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
சென்னை உயர்நீதிமன்றம்
பகிர்:

சென்னை: கள்ளக்குறிச்சி கலவரம் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணத்திலும் விசாரிப்பதாக காவல் துறை விசாரணை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் யாரையும் பாதுகாக்கும் எண்ணமில்லை என்று உயர் நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் அளித்துள்ளது.

ஜூலை 27 ஆம் தேதி முதல் கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடப்பதாகவும் காவல் துறை தகவல் அளித்துள்ளது.

பின்னர் நீதிபதி, பள்ளியை விரைவில் தொடங்கி நடத்த வேண்டும் என்றும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து பள்ளிகளிலும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். 

இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.