ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு துவக்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு ஒன்றை துவங்கினார்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:05 PM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் புதிய அமைப்பு ஒன்றை துவங்கினார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் பூங்குன்றன் தெரிவித்திருப்பதாவது:
"அம்மா ஆன்மீக பேரவைத் தலைவராக உங்கள் ஆசியோடு இன்று முதல் செயல்பட ஆரம்பிக்கின்றேன்.
Advertisement
இதையும் படிக்க: குலாம் நபி ஆசாத்துக்கு கரோனா பாதிப்பு
அரசியல் இதில் இல்லை. தாயை நேசிக்கும் உங்கள் வாழ்த்துக்களோடு பயணிக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் பெரும் நம்பிக்கையைப் பெற்ற பூங்குன்றன் அவர் இருந்தவரை எப்போதும் பரபரப்புடனேயே காணப்பட்டார்.