அரசியலை விட்டு விலகத் தயார்: ஓபிஎஸ் அதிரடி
நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு மணி நேரம் முதல்வருடன் பேசியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டுகிறார். நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்
நான் முதல்வரை சந்தித்ததாக கூறிவதை நிருபிக்கத் தவறினால் எடப்பாடி அரசியலை விட்டு விலகுவாரா என்று ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
Advertisement
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் அளிக்கிறேன் என்று ஓபிஎஸ் கூறினார்.
இதையும் படிக்க: 'அந்த நேரத்தில்..’ குழந்தைகள் இருக்கக் கூடாது: சன்னி லியோன்
நேற்று பழனிசாமி தரப்பு நடத்திய போராட்டத்தை எனக்கு எதிரான போராட்டமாக கருதவில்லை என ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.