தமிழ்நாடு

தமிழ்வழி மருத்துவப் படிப்புக்கான பாடத்திட்டம் மொழிபெயர்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத் திட்டம் மொழி பெயர்ப்பு பணி நடந்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

DIN

தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத் திட்டம் மொழி பெயர்ப்பு பணி நடந்து வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

மேலும், ஸ்டான்லி மருத்துவமனையில் முழுஉடல் பரிசோதனை மையத்திற்கான இணையதள முகவரி அமைச்சர் திறந்து வைத்தார்.

ஹிந்தியில் மருத்துவம் கற்றுக்கொடுப்பது போன்று தமிழிலும் கற்றுக்கொடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழில் மருத்துவம் பயிற்றுவிக்க பாடத் திட்டம் மொழி பெயர்ப்பு பணி நடந்து வருகிறது. முதலாம் ஆண்டு பாடப்புத்தகத்திற்கான  மொழி பெயர்ப்பு பணி நடந்துவருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் தெரிவித்துள்ளார்.

தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூர், ராணிபேட்டை  உள்பட 6 இடங்களில் மருத்துவ கல்லூரிகள் நிறுவ முன் அனுமதி கேட்டுள்ளோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவ கல்லூரிகள் நிறுவ அனுமதி கிடைத்தவுடன், தமிழ்வழி மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT