FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

குரு பெயர்ச்சி விழா: திட்டை கோயிலில் திரண்ட பக்தர்கள்

தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை கோயிலில் குருபெயர்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.

Updated On : 14 ஏப்ரல் 2022, 10:54 am IST
திட்டை கோயிலில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் குரு பகவான்.
பகிர்:

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள திட்டை கோயிலில் குருபெயர்ச்சி விழா வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது. இதில், அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபட்டனர்.

தஞ்சாவூர் - மெலட்டூர் சாலையில் உள்ள இக்கோயிலில் தனி சன்னதியில் குரு பகவான் ராஜ குருவாக எழுந்தருளியுள்ளார். 

திட்டை கோயிலில் குரு பகவானை வழிபடுவதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.

குரு பகவான் வியாழக்கிழமை (இன்று) அதிகாலை 4.16 மணிக்கு  கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதையொட்டி குருபகவானுக்குச் சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் செய்யப்பட்டது. பின்னர், குரு பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

Advertisement

Advertisement

திட்டை கோயிலில் குரு பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை.

இதையொட்டி ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக ஆங்காங்கே தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டது.

மேலும் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசியினர் பரிகாரம் செய்து வழிபட்டனர். 

குரு பகவானுக்கு சிறப்பு தீபாராதனை

குரு பெயர்ச்சியையொட்டி ஏப்ரல் 24-ஆம் தேதி லட்சார்ச்சனையும், ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் பரிகார ஹோமமும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments