FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இளைஞர்களுக்கு இனிப்பான செய்தியை அறிவித்தார் பழனிவேல் தியாகராஜன்

தமிழகத்தில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

Updated On : 19 ஏப்ரல் 2022, 6:07 pm IST
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
பகிர்:


சென்னை: தமிழகத்தில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்ததாவது, கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் துறையில் தற்போதிருக்கும் தேவையற்ற பணியிடங்கள் நீக்கப்பட்டு, தேவைப்படும் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும்.

மேலும், தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை கண்டறிந்து விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

அரசுப் பணியாளர் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழு சார்பில் இன்னும் 6 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். குழுவின் அறிக்கை அடிப்படையில் தேவையான பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு, காலியாக இருக்கும் பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவில் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments