மேட்டூர் அணை நீர்மட்டம் 105.30 அடியாக உயர்வு
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 105.30 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 105.30 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில்,
இன்று சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3459 கன அடியாகக் குறைந்துள்ளது.
மேலும், நேற்று வெள்ளிக்கிழமை காலை 105.20 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சனிக்கிழமை காலை 105.30அடியாக உயர்ந்துள்ளது
Advertisement
Advertisement
நீர் இருப்பு 71.88 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.