குடியரசு துணைத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தில்லியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக தில்லிக்கு நேற்று இரவு சென்றடைந்தார். தில்லியில் உள்ள தமிழக இல்லத்தில் ஓய்வெடுத்த முதல்வர் ஸ்டாலின், இன்று காலை முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தார்.
இதையும் படிக்க | மக்களவைத் தேர்தல்: பிகாரில் 35 தொகுதிகளை கைப்பற்ற பாஜக இலக்கு
இதையடுத்து, குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த சந்திப்பின்போது, திமுக மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்கிறார். பின்னர், மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, தமிழகம் சாா்பிலான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.