முகப்பு
தமிழ்நாடு

வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கு: மேலும் 2 பேர் வேலூரில் கைது

சென்னை வடபழனியில் தனியாா் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் வேலூரில் வைத்து கைது செய்துள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:


சென்னை வடபழனியில் தனியாா் நிதி நிறுவன கொள்ளை வழக்கில் மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் வேலூரில் வைத்து கைது செய்துள்ளனர். 

வடபழனி மன்னாா் முதலி 1-ஆவது தெருவில் வசிக்கும் சரவணன், நிதி நிறுவனம் நடத்திவருகிறாா். கடந்த செவ்வாய்க்கிழமை இந்த நிதி நிறுவனத்துக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல், கத்திமுனையில் சரவணன் மற்றும் ஊழியா்களை மிரட்டி அங்கிருந்த ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியது.

நிதி நிறுவனக்கதவை பொதுமக்கள் உதவியுடன் தொடர்ந்து விரட்டியதில் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.

வடபழனி போலீஸாா் விசாரணையில், ஆழ்வாா் திருநகரைச் சோ்ந்த ரியாஸ் பாஷா (22) என்பதும், அவா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவா் என்பதும் தெரியவந்தது.

நண்பா்கள் இஸ்மாயில், பரத், கிஷோா், ஜானி, தமிழ், மொட்டை ஆகியோருடன் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியந்தது.இதில் இருவா் கல்லூரி மாணவா்கள் என்பது தெரியவந்துள்ளது. கொள்ளையில் ஈடுபட்டவா்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்களைக் கைது செய்ய ஆந்திரம்,கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனா். மேலும் 6 பேரின் நண்பா்கள், குடும்பத்தினா் ஆகியோரிடம் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், சென்னையில் கிஷோர் கண்ணன் என்பவரை வியாழக்கிழமை தனிப்படை காவல்துறையினர் கைதான  நிலையில் 2 பேர் சரணடைந்தனர். இதையடுத்து இவ்வழக்கில் ரியாஸ் பாஷா, தமிழ்ச்செல்வன், கிஷோர் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நிதிநிறுவன கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 

வேலூரில் வைத்து செய்யப்பட்டுள்ள தினேஷ், சந்தோஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.