முகப்பு
தமிழ்நாடு

குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

தமிழகத்தில் காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப, குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.

Updated On : 23 ஆகஸ்ட் 2022, 2:46 pm IST
குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
பகிர்:


தமிழகத்தில் காலியாக உள்ள 161 பணியிடங்களை நிரப்ப, குரூப் 5ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.

இன்று முதல் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 26 முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும், தலைமைச் செயலகத்தில் பிரிவு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 161 காலியிடங்களை நிரப்ப குரூப் 5 ஏ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் டிசம்பர் 18ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments