கனியாமூர் பள்ளி திறப்பு: ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளியை திறப்பது பற்றி ஆட்சியர் பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளியை திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனியாமூர் கலவரத்தால் சேதமடைந்துள்ள பள்ளியை சீரமைக்க அனுமதி அளிக்கக்கோரி பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் 10 நாட்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் பள்ளியை சீரமைக்க அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.