சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் ரகுபதி
சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை: சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வீடு மற்றும் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தினர்
ஆர்.காமராஜ் அமைச்சராக இருந்த 7.4.2005 ஆம் ஆண்டு முதல் 31.3.2021 வரை வருமானத்திற்கு அதிகமாக ரூ.58.44 கோடி (500%) சொத்து சேர்த்திருப்பதாக வழக்குப் பதிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வடக்கு வீதியில் உள்ள காமராஜ் வீட்டிற்கு இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு துறை அதிகாரிகள் சோதனை ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மூலம் யாரையும் பழிவாங்கும் எண்ணம் முதல்வருக்கு இல்லை. புகாரின் அடிப்படையில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
திமுகவில் நிலவி வரும் குழப்பத்திற்கும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரித்த பின்புதான் சோதனை நடத்துகின்றனர். தகுந்த முகாந்திரம் இல்லாமல் எதையும் செய்யவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.