மேட்டூர் அணையின் நீர்வரத்து 2வது நாளாக 15,200 கன அடியாக நீடிப்பு!
மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை 2-வது நாளாக வினாடிக்கு 15, 200 கன அடியாக நீடிக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று காலை 2-வது நாளாக வினாடிக்கு 15, 200 கன அடியாக நீடிக்கிறது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் நேற்று முன் தினம் மாலை வினாடிக்கு 16,000 கன அடியாக அதிகரித்தது. நேற்று காலை வினாடிக்கு 15, 200 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை 2-வது நாளாக நீர்வரத்து வினாடிக்கு 15, 200 கன அடியாக நீர்வரத்து நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் 33-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகஇருந்தது. மழையளவு 6.40 மி.மீ. ஆக பதிவானது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.