தீபாவளி: 5.63 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் வெளியூர் பயணம்
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து 3 நாள்களில் 10,325 அரசுப் பேருந்துகளில் 5,63,541 பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர்.
தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து 3 நாள்களில் 10,325 அரசுப் பேருந்துகளில் 5,63,541 பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர்.
தீபாவளி பண்டிகை இன்று தமிழகம் உள்பட நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் வசிப்பவா்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட அவா்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம்.
இதையும் படிக்க- கேரள ஆளுநர் உத்தரவு: உயர்நீதிமன்றத்தில் துணைவேந்தர்கள் முறையீடு
Advertisement
Advertisement
தீபாவளிக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்கள் என்பதால், சொந்த ஊா்களுக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் சென்றனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 16,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் தீபாவளியையொட்டி சென்னையிலிருந்து 3 நாள்களில் 10,325 அரசுப் பேருந்துகளில் 5,63,541 பயணிகள் வெளியூர் சென்றதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. அதேசமயம் இதுவரை 1,85,052 பயணிகள் அரசுப் பேருந்துகளில் வெளிர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.