‘நேரம் வரும்போது அதிமுக அலுவலகம் செல்வேன்’: சசிகலா
நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்று சசிகலா அளித்துள்ள பேட்டி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் என்று சசிகலா அளித்துள்ள பேட்டி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் அண்ணாவின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கூறியது,
Advertisement
Advertisement
அண்ணாவின் பாதையில் நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம் என்றும், நேரம் வரும்போது கட்சி அலுவலகத்திற்கு செல்வேன் எனவும் தெரிவித்தார். பன்னீர்செல்வத்தை நேரில் எப்போது சந்திப்பீர்கள் என்றால் கேள்விக்கு? நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம் எனவும் அவர் பதிலளித்தார்.
மேலும் திமுக அரசு சொன்னதை எதுவும் செய்யவில்லை என போகும் இடங்களில் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்களுக்காக அம்மா கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை திமுக அரசு நிறுத்துவது அவர்களுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | மருத்துவமனை தூய்மை பணியாளரை கரம் பிடித்த பெண் மருத்துவர்
மேலும் எடப்பாடி பழனிச்சாமி, பழைய பழனிச்சாமி இல்லை எனக் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் எப்படி இருக்கிறார் என நீங்கள்தான் கூற வேண்டும் என்றார். நிச்சயமாக அதிமுகவிற்கு தலைமை ஏற்று அனைவரையும் ஒன்றிணைப்பேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒன்றிணைந்து நல்ல வெற்றிகளை பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.