காஞ்சிபுரத்தில் ரெளடி வெட்டிக் கொலை!
காஞ்சிபுரத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பிள்ளையார் பாளையம் பகுதியில் உள்ள பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் சுகுமாரன் மகன் பிரபா என்ற பிரபாகரன் (30).
இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்து வருகிறது. இவர் சம்பவ இடத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென காரில் வந்த மர்ம நபர்கள் பட்டப் பகலில் இவரை வெட்டிக் கொலை செய்து விட்டு, அதே காரில் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: கான்ஜூரிங் கண்ணப்பன் பட இயக்குநருக்கு பரிசளித்த சதீஷ்!
இச்சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். சிவகாசி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்