கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட தாமிரவருணி கரையோர மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரி நீர் தாமிரவருணி ஆற்றில் வெளியேற்றப்பட்டும், அதிகப்படியான மழை நீர் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார்  10,100 கன அடி நீர்  வந்து கொண்டிருக்கிறது.  

மேலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே,  மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள்,  கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரவருணி ஆற்றங்கரையோர  கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு  எச்சரிக்கப்படுகிறார்கள்.

மேலும், தாமிரவருணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் வட்டாட்சியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர்  கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவில் தலைவர்கள் இணையவில்லை என்றால்...! - ஓபிஎஸ் பேட்டி

முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் இருக்கும்வரை கூட்டணியை ஏற்க மாட்டோம்: டிடிவி தினகரன்

மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

முதல் இடத்தை நோக்கிய பயணம் அல்ல; பிடித்த இடம் நோக்கி..!

பைசன் அப்டேட்!

SCROLL FOR NEXT