FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கம்! காரணம்?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டிவிட்டர் பக்கங்களும் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளன. 

2 பிப்ரவரி 2024, 5:17 pm IST
சீமான் (கோப்புப் படம்)
பகிர்:


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டிவிட்டர் பக்கங்களும் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளன. 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், மேடைகளில் உணர்வுப்பூர்வமாகவும் ஆவேசமாகவும் பேசும் காணொலிகளைப் பகிர்வது வழக்கம். 

மேலும், அரசுக்கு எதிரான கருத்துகளையும் டிவிட்டரில் பதிவிடுவார். இந்நிலையில், சீமானின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

அவரின் டிவிட்டர் பக்கத்திற்குச் சென்றால், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ் உள்பட மேலும் சிலரின் டிவிட்டர் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments