வழக்குரைஞர் மணிகண்டன் 
தமிழ்நாடு

நாமக்கல் அருகே வழக்குரைஞர் வெட்டிக்கொலை

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்குரைஞர் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

DIN

நாமக்கல்: நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்குரைஞர் மணிகண்டன் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வரகூரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(42). வழக்குரைஞரான இவர், வெள்ளிக்கிழமை இரவு எருமப்பட்டி-கஸ்தூரிபட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் அங்கு சென்று மணிகண்டன் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை தொடர்பாக காவல் ஆய்வாளர் சுமதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கொலை செய்த மர்ம நபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

இன்பன் உதயநிதி வெளியிடும் தனுஷின் இட்லி கடை!

SCROLL FOR NEXT