தமிழ்நாடு

விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்

விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

DIN


விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் அருகே, சேலத்தில் இருந்து நெய்வேலி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து சாலையில் உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், பேருந்தில் இருந்த பயணிகளில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT