கர்நாடகத்தில் நாளை பந்த்: தமிழக எல்லை வரை பேருந்துகள் இயக்கம்
கர்நாடகத்தில் நாளை(செப்.29) முழு அடைப்பு காரணமாக தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.
கர்நாடகத்தில் நாளை(செப்.29) நடைபெறும் முழு அடைப்பு காரணமாக, தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவதைக் கண்டித்தும், மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தக் கோரியும் கா்நாடக விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் சாா்பில் முழு அடைப்பு நடைபெறவுள்ளது.
பெரும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும்பொருட்டு இன்று நள்ளிரவு முதல் நாளை(செப்.29) நள்ளிரவு வரை பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இருமாநில எல்லைப்பகுதியில் நிலவும் சூழ்நிலையைப் பொருத்து பேருந்து சேவை தொடரும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.