குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!
குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில், நாட்டின் 74-வது குடியரசு தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் வெகு விமர்சையாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தன்று நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க: நடிகர் ரஜினிகாந்த் பெயர், புகைப்படம் பயன்படுத்தத் தடை
இந்த நிலையில், விருதுநகரில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காதது குறித்து அந்த அறிவிப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.