தொடர்ந்து 3வது நாளாக 42 ஆயிரத்தில் நீடிக்கும் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் 42 ஆயிரத்தில் நீடித்து வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ள நிலையில் மீண்டும் 42 ஆயிரத்தில் நீடித்து வருகிறது.
தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைக் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த வாரம் சரிவு ஏற்பட்ட நிலையில், இரண்டு நாள்களாக மீண்டும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், மார்ச் 6ம் தேதி காலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.1 குறைந்து ரூ.5,250 ஆகவும், ஒரு சவரன் ரூ.8 குறைந்து ரூ.42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
அதேசமயம், வெள்ளியின் விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.70.60 ஆகவும், ஒரு கிலோ ரூ.600 உயர்ந்து ரூ.70,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
உலக அளவில் பணவீக்கம், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.