ஜப்பான் நாட்டுக்கு சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஜப்பான் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்துள்ளார்.
ஜப்பான் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றடைந்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக மே 23 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
சிங்கப்பூரில் 2 நாள்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்றடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ராகுல் காந்தியை நாளை சந்திக்கிறார் அரவிந்த் கேஜரிவால்!
ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்திற்கு சென்ற முதல்வரை இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார். ஜப்பான் நாட்டின் ஓசாகா நகரில் நாளை நடைபெறும் முதலீட்டார்கள் மாநாட்டில் முதல்வர் பங்கேற்க உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.