அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் பிப்.2ல் கும்பாபிஷேகம்!
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு நடைபெற உள்ளது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு நடைபெற உள்ளது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதைத்தொடர்ந்து, அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2024 தை மாதம் 19ஆம் நாள் பிப்ரவரி 2ஆம்தேதி வெள்ளிக்கிழமை காலை 7.45 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில், கோயில் சிவாச்சாரியார்கள், கோயில் அலுவலர்கள், அறங்காவலர் குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.