இரு சக்கர வாகனத்தில் சாகசம்: டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிவு!
இருசக்கர வாகன பயணத்தின் சாகசம் செய்ய முயன்றபோது விபத்துக்குள்ளான டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இருசக்கர வாகன பயணத்தின் சாகசம் செய்ய முயன்றபோது விபத்துக்குள்ளான டிடிஎஃப் வாசன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டிடிஎஃப் வாசன் என்பவர் இருசக்கர வாகன பயணத்தின் மூலம் யூடியூப்பில் பிரபலமானவராக அறியப்படுகிறார். யூடியூப்பில் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இவர் அடிக்கடி அதிவேகமாக பயணம் செய்து சாகசங்களை மேற்கொண்டு வருவார்.
இந்தநிலையில், காஞ்சிபுரத்திற்கு அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகன பயணத்தின்போது முன் சக்கரத்தைத் தூக்கி சாகசம் முயன்றுள்ளார்.
Advertisement
Advertisement
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் 2 முறை தலைகீழாக சுழன்று சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், டிடிஎஃப் வாசன் கையில் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | விருத்தாசலம் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் காயம்
இந்த நிலையில், டிடிஎஃப் வாசன் மீது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.