புறங்கூறிப் பொய்யாக வாழ்வதைவிட இறப்பதே மேல்! எக்ஸ் பதிவில் யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?
நடிகை நிவெதா பெத்துராஜ்ஜின் எக்ஸ் பதிவு வைரலாகி வருவது பற்றி...
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் என்ற திருக்குறளை நடிகை நிவேதா பெத்துராஜ் செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிவேதா பெத்துராஜ், சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி கருத்துகளைப் பதிவிடுபவர் அல்ல.
எப்போதாவது மட்டுமே எக்ஸ் பக்கத்தில் பதிவிடும் நிவேதா பெத்துராஜ், பெரும்பாலும் திரைப்படங்கள் சார்ந்த போஸ்டர்களைதான் பகிர்ந்து வருகிறார்.
Advertisement
Advertisement
இதனிடையே, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பெண்கள் தொடர்பான இழிவான கருத்துகளை பேசியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் சூழலில், நிவேதா பெத்துராஜ் எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டிருக்கும் பதிவு பேசுபொருளாகியுள்ளது.
“புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்” என்ற திருக்குறளை நிவேதா பெத்துராஜ் எக்ஸ் தளத்தில் இன்று காலை பதிவிட்டுள்ளார்.
இந்த 183-வது திருக்குறளின் பொருள், “பிறர் இல்லாதபோது அவரைப் பற்றிக் குறைகூறிப் பொய் பேசி வாழ்வதைவிட இறந்துவிடுதலே மேல்” என்பதாகும்.
உதயநிதி ஸ்டாலினின் கைதுக்கு மத்தியில் திடீரென்று நிவேதா பெத்துராஜ் வெளியிட்டிருக்கும் பதிவால், அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்ற விவாதம் இணையத்தில் தொடங்கியுள்ளது.
உதயநிதி ஸ்டாலினும் நிவேதா பெத்துராஜும் இணைந்து ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Better to die than to live a life of backbiting and falsehood! Whom is Nivetha Pethuraj referring to in her X post?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.