மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ராஜ்நாத் சிங் வழிபாடு
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:38 AM
பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(ஏப். 9) காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங் மதுரைக்கு வருகை தந்ததையொட்டி, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மீனாட்சியம்மன் கோயிலிலும் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.