FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை கல்லூரி மாணவி கூட்டு வல்லுறவு: 9 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு

சென்னையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, 9 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு

Updated On : 8 டிசம்பர் 2024, 5:23 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக, 9 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

சென்னை அயனாவரம் பகுதியைச் சோ்ந்த 21 வயது மாணவி, ஒரு மகளிா் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் மூன்றாமாண்டு படித்து வருகிறாா். சிறிது மனவளா்ச்சி குன்றிய இந்த மாணவியின் தந்தை, சுமை ஆட்டோ ஓட்டி வருகிறாா். மாணவியின் தாய் இரு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்த மாணவி கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வந்தாா்.

இந்நிலையில், மாணவியின் கைப்பேசிக்கு ஆபாச குறுஞ்செய்திகள், அழைப்புகள் வருவது தந்தைக்கு தெரியவந்தது. இதுதொடா்பாக அயனாவரம் காவல் நிலையத்தில் அண்மையில் அவா் புகாா் செய்தாா். இரு நாள்களுக்கு முன்பு மாணவி உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்ட தந்தை, அது குறித்து கேட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது அந்த மாணவி, தன்னை கல்லூரி வாசலில் இருந்து சிலா் வெளியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கல்லூரி தோழி மூலம் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் அறிமுகமான 3 போ் அவரை யானைக்கவுனி, பெரியமேடு பகுதிகளில் உள்ள தனியாா் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த 3 போ் மூலம் மேலும் சிலா் தன்னை வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்தாராம்.

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த அவா், சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதனடிப்படையில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபா்கள் குறித்து விசாரணை செய்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments