சென்னையில் டிச.11ல் கனமழை எச்சரிக்கை!
சென்னையில் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்..
சென்னையில் டிசம்பர் 11-ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவாகிய ஃபென்ஜால் புயல் தமிழ்கத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பெய்த அதி கனமழையால் பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.
விழுப்புரத்தில் கனமழையால் வீடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், கடந்த 10 நாள்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் கல்வி நிறுவனங்கள் செயல்பட தொடங்கியது.
Advertisement
இந்த நிலையில், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 11-ல் திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.