குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்ட முதல் ராக்கெட்!
குலசேகரன்பட்டினம் இஸ்ரோ ஏவுதளத்திலிருந்து இருந்து ரோகிணி ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, ஆா்.ஹெச்.200 - ரோகிணி ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீஹரிகோட்டா இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் அமைக்கப்படவிருக்கும் வெளிதுறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து முதல் ராக்கெட் சோதனை முறையில் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைத்திடும் கலைஞரின் கனவு நனவாகியுள்ளதாக கனிமொழி எம்.பி. அவரது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.