புதுக்கோட்டை: புதுகை மாவட்ட வன அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வனத்துறை வாகன விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள பொருள்களை வெளியே எடுத்து நீதிமன்றப் பணியாளர்கள் ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2014-ம் ஆண்டு வம்பன்பகுதியில் நடந்த விபத்தில் வனத்துறை வாகனம் மோதி இருவர் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி இழப்பீடு வழங்கப்படாத நிலையில் இந்த ஜப்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க: இன்றுமுதலே படிப்படியாக பேருந்துகள் நிறுத்தப்படும்!
இந்த நிலையில், வனத்துறையிருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.