FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு: கட்சிக் கொடியேற்றத்துடன் தொடங்கியது!

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில்  கட்சிக் கொடியேற்றத்துடன் சேலத்தில் இன்று தொடங்கியது.

Updated On : 21 ஜனவரி 2024, 10:53 am IST
பகிர்:

சேலம்: திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு, மாநில உரிமை மீட்பு முழக்கம் என்ற தலைப்பில்  கட்சிக் கொடியேற்றத்துடன் சேலத்தில் இன்று தொடங்கியது.

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநாட்டு திடலை காலை 9 மணி அளவில் வந்தடைந்தார். அவரை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திறந்த வாகனத்தில் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றபடி மாநாட்டு திடலை வந்தடைந்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மாநாட்டு திடலுக்கு வந்து சேர்ந்தனர். 

மாநாட்டு திடலின் முகப்பில் கொடிக்கம்பம் அருகே ஆயிரக்கணக்கில் திமுக தொண்டர்கள் திரண்டிருந்தனர். திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி  வைத்தார்.

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து மாநாடு கட்சி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் நான்கு பேரின் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முதல்வர் முன்னிலையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டு திடலை எம்.எல்.ஏ. எழிலரசன் திறந்து வைத்தார்.

இளைஞரணி முழக்க பாடலுன் மாநாடு தொடங்கியது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மாவட்ட  செயலாளர்கள் ஆர்.ராஜேந்திரன் (சேலம் மத்திய), டி.எம்.செல்வகணபதி (சேலம் மேற்கு), எஸ்.ஆர்.சிவலிங்கம் (சேலம் கிழக்கு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments