டாஸ்மாக் கடைகளில் பிப்.1 முதல் மதுபானங்களின் விலை உயர்வு!
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மதுபான விலை உயர்வு அமலாகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மதுபான விலை உயர்வு அமலாகிறது.
அதன்படி, 180 மில்லி அளவு கொண்ட சாதாரண மதுபானத்தின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 180 மில்லி உயர் ரக மதுபானத்தின் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பீர் வகைகள் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதே அடிப்படையில் ஹாஃப்.ஃபுல். ஒரு லிட்டர் மதுபானங்களில் விலையும் அந்தந்த ரகங்களுக்கு ஏற்ப உயர்த்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
650 மில்லி அளவு கொண்ட பீர் வகைளின் விலையும் ரூ.10, மற்றும் 325 மில்லி, 500 மில்லி, 375 மில்லி, 750 மில்லி மற்றும் 1000 மில்லி அளவு கொண்ட மதுபானங்களும் அந்தந்த ரகங்களுக்கு ஏற்ப விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.