தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் பிப்.1 முதல் மதுபானங்களின் விலை உயர்வு!

DIN

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மதுபான விலை உயர்வு அமலாகிறது.

அதன்படி, 180 மில்லி அளவு கொண்ட சாதாரண மதுபானத்தின் விலை ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 180 மில்லி உயர் ரக மதுபானத்தின் விலை ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், பீர் வகைகள் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதே அடிப்படையில் ஹாஃப்.ஃபுல். ஒரு லிட்டர் மதுபானங்களில் விலையும் அந்தந்த ரகங்களுக்கு ஏற்ப உயர்த்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

650 மில்லி அளவு கொண்ட பீர் வகைளின் விலையும் ரூ.10, மற்றும் 325 மில்லி, 500 மில்லி, 375 மில்லி,  750 மில்லி மற்றும் 1000 மில்லி அளவு கொண்ட மதுபானங்களும் அந்தந்த ரகங்களுக்கு ஏற்ப விலை  உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

SCROLL FOR NEXT