தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் கைது: தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் மீன் பிடித்தபோது எல்லைதாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.