கோப்புப்படம் 
தமிழ்நாடு

தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்: தமிழக மீனவர்கள் கைது!

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தமிழக மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வப்போது கைது செய்து வருவது தொடர்கதையாகி உள்ளது. மேலும் தமிழக மீனவர்களின் படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துகொள்கின்றனர்.

இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகுகளுடன் 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசன்துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சக்சஸ் உங்கள் சாய்ஸ்!

நாய்வால் (சிறுகதைகள்)

தமிழக டிஜிபி விவகாரம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஓர்மைகள் மறக்குமோ!

"எல்லோரும் ஒன்றிணைந்தால்தான் ஜெயிக்க முடியும் என எல்லா தலைவர்களிடமும் பேசியிருக்கேன்"

SCROLL FOR NEXT