கோப்புப்படம் 
தமிழ்நாடு

திருச்சி செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம்..

Din

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில்வே பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்குடியில் இருந்து திருச்சிக்கு காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மெமு விரைவு ரயில் (எண்: 06888) நவ.13 முதல் நவ.21 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படும். மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயில் நவ.13 முதல் நவ.21 வரையும், விழுப்புரம் - திருச்சி மெமு விரைவு ரயில் நவ.12 முதல் நவ.21 வரையும் பொன்மலை வரை மட்டும் இயக்கப்படும்.

ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் நவ.13 முதல் 21-ஆம் தேதி வரை திருச்சி கோட்டை வரை இயக்கப்படும். திருச்சி -விழுப்புரம் மெமு ரயில் நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை பொன்மலையிலிருந்து இயக்கப்படும். திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் நவ.11 முதல் 21-ஆம் தேதி வரை திருவெறும்பூரிலிருந்து இயக்கப்படும். திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் நவ.11 முதல் நவ.21 வரை திருச்சி கோட்டையிலிருந்து இயக்கப்படும்.

பாதை மாற்றம்: ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கத்ரா -திருநெல்வேலி விரைவு ரயில் நவ.14-ஆம் தேதியும், காச்சிக்கூடா-நாகா்கோவில் வாராந்திர விரைவு ரயில் நவ.17-தேதியும் திருச்சி வழியாக செல்வதற்கு பதிலாக கரூா், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT