கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.
இதேபோன்று நாகை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகை மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு ஏற்கெனவே மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூரில் அநேக இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.