புயல் சின்னம் எதிரொலி: புதுச்சேரி கடற்கரை செல்லும் வழிகள் மூடல்
கடல் சீற்றத்துடன் இருந்ததால் புதுச்சேரி கடற்கரை செல்லும் வழிகள் மூடப்பட்டன.
புதுச்சேரி: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னம் காரணமாக, புதுச்சேரி கடற்கரைக்குச் செல்லும் வழிகள் மூடப்பட்டன.
புதுச்சேரி கடற்கரை சாலைக்குச் செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருப்பதால், மக்கள் கடற்கரையில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. புதுச்சேரி கடலில் மக்கள் இறங்கக் கூடாது என அறிவுறுத்திய நிலையில் மக்கள் தொடர்ந்து கடற்கரைக்கு வந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
புயல் சின்னம் இன்று மாலை புயலாக உருவாகவிருப்பதால், புதுச்சேரி கடற்கரை இன்று காலை முதலே கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே முன்னெச்சரிக்கை காரணமாக மக்கள் கடற்கரைக்குள் நுழையாத வகையில், சாலைகள் மூடப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.