FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

துரை தயாநிதி டிஸ்சார்ஜ்! சிஎம்சி மருத்துவமனையிலிருந்து திரும்பினார்!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

Updated On : 24 செப்டம்பர் 2024, 11:44 am IST
துரை தயாநிதி
பகிர்:

வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி செவ்வாய்க்கிழமை டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்தாண்டு டிசம்பா் 6-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்தனா்.

தொடா்ந்து, துரை தயாநிதிக்கு புனா்வாழ்வு பயிற்சிக்காக வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மாா்ச் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சையுடன், புனா்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

அவருடன் மு.க.அழகிரி, குடும்பத்தினா் உடனிருந்து கவனித்து வந்தனா். சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் இருமுறையும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி ஒருமுறையும் நலம் விசாரித்தனா்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து துரை தயாநிதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு டிஸ்சாா்ஜ் செய்யப்பட்டாா். தொடா்ந்து அவரை மு.க.அழகிரி, குடும்பத்தினா் காரில் அழைத்துச் சென்றனா்.

முன்னதாக, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த துரை தயாநிதியை படம் எடுக்க விடாமல் செய்தியாளா்கள், ஒளிப்பதிவாளா்ளை மருத்துவமனை ஊழியா்கள் தாக்க முயன்றனா். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments