FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இல. கணேசன் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

இல. கணேசனின் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி

இல. கணேசனின் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி - X
பகிர்:

மறைந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடலுக்கு பிரதமர் மோடி சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தமிழகத்தைச் சேர்ந்தவரும் பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(ஆக. 15) மாலை காலமானார்.

Advertisement

Advertisement

இல. கணேசனின் மறைவுக்கு பாஜக தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக இல. கணேசனின் உடலுக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி அஞ்சலி செலுத்தினார்.

summary

Chief Minister M.K. Stalin, Deputy CM udhayanidhi stalin, DMK MP kanimozhi pays tribute to L. Ganesan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments