சென்னை புறநகர் ரயில் சேவை.  கோப்புப்படம்
தமிழ்நாடு

சென்னை புறநகர் ரயில் சேவை பாதிப்பு!

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிப்பு தொடர்பாக...

தினமணி செய்திச் சேவை

சென்னை கடற்கரை - தாம்பரம் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

கோடம்பாக்கம் முதல் பரங்கிமலை வரை தண்டவாளத்தின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது, மரக்கிளையானது, மின்கம்பம் மீது விழுந்ததால், மின்கம்பம் வெடித்து பயங்கர சத்தம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் வழித்தடத்தில் செல்லும் புறநகர்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், அரை மணி நேரத்துக்கு புறநகர் ரயில்கள் இயக்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

1 மணி நேரம் ஆகியும் ரயில்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். பலர் மாற்று சேவைகளை நாடியுள்ளனர்.

திடீர் அறிவிப்பு காரணமாக, கல்லூரிகள், வேலைக்கு செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகள் பாதுகாப்புக் கருதியே மரக்கிளைகள் அகற்றும் நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்வதாகவும், பயணிகளின் சிரமத்தை புரிந்துக்கொள்வதாகவும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Passengers are suffering greatly due to the disruption of the Chennai Beach - Tambaram suburban train service.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் சுற்றுடன் வெளியேறினார் லக்‌ஷயா சென்!

விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹானர் ஸ்மார்ட்போன்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை! இபிஎஸ்

முதல்வருக்கு பயம் ஏன்? 130 வது சட்டப்பிரிவு பாஜகவிற்கும் பொருந்தும்! அண்ணாமலை பேட்டி

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

SCROLL FOR NEXT